வள்ளலார் மக்கள் உணவகம்

நமது மக்கள் பாதை பேரியக்கத்தின் வழிகாட்டி நேர்மையாளர் உயர்திரு உ. சகாயம் இ.ஆ.ப (வி.ஓ) அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ள "வள்ளலார் மக்கள் உணவகம்" தொடர்ந்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டு நோயாளிகள், முதியோர்கள் மற்றும் எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கி வருகின்றது. வள்ளலார் மக்கள் உணவகத்தின் மூலம் பல்வேறு பசிப்பிணி போக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்குவதில் நம் அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் நமது நேர்மையாளர் அவர்களால் "இல்லத்திற்கு கால்படி..! இல்லாதவருக்கு ஒரு கைப்பிடி அரிசி..!!" திட்டம் செயல்பட்டு வருகிறது. பசிப்பிணியைப் போக்கி..! மானுடத்தைக் காப்போம்..!!

வள்ளலார் மக்கள் உணவகத்திட்டத்தில் பங்களிப்பு செய்ய விரும்பினால்,

தொடர்புக்கு
7550236975/04448039929

Post Tags:

posts